உன் கரம் மட்டும் அறிந்த
என் நெஞ்சத்தை
உன் நெஞ்சம் கொண்டு பழுது பார்க்க வா ....
என் ஆயுள் முழுவதும்
உன் அங்கம் மட்டும் பணி செய்ய வா ....
என் விரல் கொண்டு
உன் உடல் திண்டிக் கொள்ள வா ....
உன் உதட்டு வரிகளில்
என் உதடுகளால் எழுதிக் கொள்ள வா ....
உன் விரல்களால்
என் தலை முடிகளை தரம் பார்க்க வா ....
உன் வெட்க்கத்தை என்னில் ஊற்றி..
என் வீரத்தை பிடுங்கிக் கொள்ள வா ....
என்னில் உன்னை…
உன்னில் என்னை அடைத்துக் கொள்ள வா ....
என் சுவாசப் பைகளில்
உன் வாசத்தை மட்டும் நிரப்ப வா ....
உன் இடையினை என் கரங்களால்
கட்டிப் போட வா ....
உன் தீண்டல்களில்
என் தோல்களை தூய்மைப்படுத்த வா ....
உன் சிரம் தாழ்த்தி சினுங்க வைக்க வா ....
உன் இடை சுற்ற
என் கரம் வேண்டும் வா ....
அன்பே உன்னை
முடிந்தவரை முத்தமிட்டுக்கொள்ள வா ....
உன் கனவுப் பொய்களை
என்னில் மட்டும் நிஜமாக்க வா ....
எதை வேண்டுமானலும் எடுத்துக் கொள்ள வா .....
ஆனால்?
என்னிலிருந்து
உன்னைத்தவிர…!
( சனி, 21 பிப்ரவரி, 2009 இடுகையிட்ட
நீ வருவாய் என ..... கவிதையின் தொடர்ச்சி )